லீணா மணிமேகலையைக் கைது செய்ய வேண்டும்!

லிணா மணிமேகலை மீது இந்த மக்கள் கட்சிக்காரர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார், லிணா மணிமேகலை இலக்கியம் என்ற பேரில் ஆபாசத்தை எழுதுவதாகவும் இலக்கியம் என்ற போர்வையில் உடலுறவு நிகழ்வுகளையும் அந்தரங்க உறுப்புக்களையும் பற்றி எழுதுவதாவும் அவர் மீது இ.பி.கோ 292,293 படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்திருகிறார்.


இதுபற்றி ஜீனியர்விகடன் 24.3.10 இதழில் செய்தி வந்துள்ளது, இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவசியம் நடவடிக்கை எடுக்கவேண்டும். லீணா மணிமேகலையை இந்தப்பிரிவுகளில் அவசியம் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும். அப்படி ஒரு முன்மாதிரி நடவடிக்கை நடக்க வேண்டும். அப்போது தான் இதே பிரிவுகளின்படி இந்துமதத்தின் அனைத்து தலைவர்களையும் அனைத்து பக்தி இலக்கிய ஆசிரியர்களையும் இதே பிரிவில் உள்ளே தள்ள வாய்ப்பு உருவாகும்.

ஆணும் ஆணும் இணைந்து கூடி உறவு கொண்டு அய்யப்பன் உருவாணான் என்று ஒரு கதையை எழுதி அதை கோடிக்கணக்கான மக்களை நம்பவைத்த ஆபாசமோசடிக்காக அந்தக் கதையக் கௌப்பிவிட்ட பார்ப்பனர்களையும், அந்தக் கதையை இன்றும் பரப்பிவரும் குருசாமி மற்றும் கன்னி சாமிகளயும் அத வைத்துப் ஈனப் பொழப்புப் பொழைக்கும் மலையாள பார்ப்பனர்களான மேல்சாந்தி கீழ்சாந்திகளையும் உள்ளே தூக்கிப் போடமுடியும்.

பிட்டம் ரெண்டையும் பெருவேல் காக்க, வட்டக் குதையை வடிவேல் காக்க என அனைத்து அந்தரங்க உறுப்புக்களையும் குறித்து கந்த சஸ்டி கவசம் என்று பாடல் எழுதி பாடி அதை எல்லா இந்துக்களின் வீடுகளிலும் விடிகாலையில் ஒலிக்கச்செய்து கொண்டிருக்கும் முருகன் அடியார்களையும், பழனி வடபழனி பார்ப்பனப் பண்டாரங்களையும், கந்த சஸ்டி கவசம் அச்சிட்டு வெளியிடும் பதிப்பகத்தினரையும், அதை விற்பனை செய்யும் கடைக்காரர்களையும் கம்பி எண்ண வைக்க முடியும்.


குதிரைக்கு பிறந்த இராமனைப் பற்றியும், குதிரையை த்சரதனின் மனைவிமேல் ஏற்றி இராமனைப் பெற்றெடுத்த ஆபாச சம்பவத்தை பற்றியும், அறுபது ஆயிரம் பெண்களுடன் தசரதன் கூத்தடித்த க்ருப் செக்ஸ் பற்றியும் இராமன் இல்லாத நேரத்தில் கொழுந்தன் இலட்சுமணனை இழுத்த சீதையைப் பற்றியும், பேசாமல் போய்க்கொண்டிருந்த இராவணனை மயக்கி தனது ஒவ்வொரு உறுப்புகளையும் தனித்தனியே காட்டி விளக்கி மயக்கி அவனுடன் ஓடிப்போன சீதையைப் பற்றியும் இராமாயணம் என்ற பெயரில் ஒரு ஆபாசக்கதையை எழுதிய வால்மீகி முதற்கொண்டு கம்பன் மற்றும் இராஜாஜி வரையிலான அனைவர் மீதும் இ.பி.கோ 292, 293 பிரிவுகளில் வழக்குப்


பதிவு செய்யவேண்டும். இராமாயண்ம் என்ற ஆபாசக்களஞ்சியத்தை அடிப்படையாக வைத்து இந்த ஆண்டுகூட இராமலீலா நடத்திய சோனியா காந்தியை உள்ளே போட வேண்டும்.

அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்று ஐந்து ஆண்களை வைத்துக்கொண்டிருந்த பாஞ்சாலிக் கதையான மகாபாரதத்தை எழுதியவர்களையும் இவற்றை இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களாக நமக்குக் காட்டிய சங்கரமடங்களையும் இந்திய அரசாங்கங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்,


பெண்களின் அந்தரங்கத்தில் தன் தும்பிக்கையை வைத்து உறிஞ்சும் காட்சியை சிலையாக வைத்திருக்கும் கோயில்களை இடித்துத் தரை மட்டமாக்க வேண்டும். இப்படி ஒரு காட்சியை சட்டசபயில் தலைவர் கலைஞரே புகைப்பட ஆதாரமாக வெளியிட்டார், அப்படி பெண்குறிக்குள் தும்பிக்கையை வைத்து உறிஞ்சும் விநாயகனையும் அந்தக் கதையைப் பரப்பும் பார்ப்பனர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும்,

சிவனும் பார்வதியும் ஆண்டுக்கணக்கில் புணர்ந்து அதனால் வெளிப்பட்ட விந்துவை பொதுமக்கள் பயன்படுத்தும் ஆற்றில் விட்டானாம் சிவன். அத ஆறு பெண்கள் குடித்தார்களாம். அதனால் ஆறுமுகன் பிறந்தானாம். இப்படி ஒரு ஆபாசக்கதயை எழுதி வெளியிட்டு பரப்பிய பார்ப்பனர்களையும். அந்தக் கதையை அடிப்படையாக வைத்து கோடிக்கணக்கான மக்களை முட்டாளாக்கி விந்துகுடித்ததால் பிறந்தவனை இன்றும் வணங்கிவரும் மக்களையும் அவனை வழிபட விடுமுறை விடும் அரசையும் குற்றவாளிகளாக்க வேண்டும்.


பெருமாளை நினைத்து உருகி படு விக்கிரமான செக்ஸ்பாடல்களை எழுதிய ஆண்டாள் திருப்பாவையை தடை செய்ய வேண்டும். அந்தப் பாடல்களை மார்கழி மாதத்தில் அதிகாலையில் தெருவில் பொது இடமான கோவில் தெருக்களிலும் பாடிக்கொண்டு அலையும் மாமிகளைக் கைது செய்ய வேண்டும்,.


ஒரு லீணா மணிமேகலையால் இந்துமதத்தில் உள்ள அனைத்து ஆபாசக்கூட்டத்திற்கும் முடிவு வரும் என்றால் வீராங்கனையாக அவர் உள்ளே போவது சமுதாயத்துக்கு நல்லதுதான். அவர் மீது நடவடிக்கை எடுப்பதும் அவசியமானதுதான்.

லீணா இணையத்தில் எழுதியது ஆபாசம் என்று அதே இணையத்தில் உலாவரும் மற்றொரு பெண் எழுத்தாளரான தமிழச்சி என்பவர் பேசியுள்ளார். ஜீனியர் விகடனிலும் செய்தி கொடுத்துள்ளார். லீணா மணிமேகலையைக் கண்டித்துள்ளார்.

இருவருக்கும் என்ன தனிப்பட்ட தகராறோ தெரியவில்லை. சீமான் இயக்கிய தமிழ்த்திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக தமிழச்சி முயற்சித்தாராம். அதை லீணா தடுத்துவிட்டாராம். அதனால்தான் சீமான் மீதும் விமர்சனங்களை வைக்கிறாராம். இப்படி தனிப்பட்ட கோபத்தை பொதுவிசயங்களில் தமிழச்சி காட்டிஇருக்கக்கூடாது.

இதே தமிழச்சி ஏற்கனவே தமிழ்மணம் என்ற இணையதளத்தில் யோனிப் புரட்சி செய்தவர் ஆவார். பெண்குறியின் படத்தை அப்படியே படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை கிளப்பியவர். எதற்கெடுத்தாலும் பெண்குறியையும் ஆண்குறியையும் பற்றி அடிக்கடி எழுதுவதால் அந்த தமிழ்மணம் என்ற இணையதளத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர். இதே ஆபாசக் குற்றச்சாட்டு அவர் மீதும் சாட்டப்பட்டது. அய்யோ பெண்விடுதலைக்கு ஆபத்து. குரல் கொடுக்க யாரும் இல்லையா என்று தனது சொந்த ப்ளாக்கில் புலம்பித்தவித்தவர். பெரியாரின் பெண்ணியத்துக்கு ஆதரவே இல்லையா என அலறியவர். பெரியார் கருத்துக்கு தமிழ்மணம் தளம் எதிராக இருக்கிறது என மோசடிக்குற்றச்சாட்டுக்களைக் கூறியவர். தான் யோனிப்புரட்சி செய்த போது இளையசமுதாயம் கெட்டுப்போகும் என தமிழச்சிக்குத் தெரியவில்லையா? இப்போது சக தோழர் ஒருவர் இந்து இயக்கங்களால் தாக்கப்படும்போது தானும் சேர்ந்து ஒரு கல்லை எறிவது ஏன் எனத் தெரியவில்லை.

சமுதாயம் சீர்கெட்டுப் போகும் அளவுக்கு இந்துமத இலக்கியங்கள் மக்களை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கினறன. ஆபாசத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் பரப்பிவரும் இந்து இலக்கியங்களை எதிர்த்து இந்தத் தமிழச்சி என்னத்த சாதித்தார் எனத் தெரியவில்லை. பாதுகாப்பாக ஃப்ரான்ஸில் உட்கார்ந்து கொண்டு ஒரு விநாயகர் சதுர்த்தி அன்று மக்களிடம் ஒரு நோட்டிஸ் கொடுத்தாராம். இதத் தவிர வேறு ஒன்றும் செய்யாத தமிழச்சி திடீரென லீணா மணிமேகலையின் இலக்கிய ஆபாசம் பற்றி கவலப் படுவது பித்தலாட்டம்.

பாண்டிச்சேரிக்கு வந்து பாலியல் தொழிலாளர்களிடம் பேட்டி எடுத்து பந்தாவாக இணையத்தில் ஏற்றிய தமிழச்சி அப்போது இந்து இலக்கியங்களை எதிர்த்து என்ன செய்தார்? ஆபாச இலக்கியங்களை எதிர்த்து என்ன செய்தார்? பெரியார் தி.க தோழர்களோடு தனக்கு தொடர்பு இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் தமிழச்சி, சமுதாயத்துக்கு நேரடியாகவோ பெரியார் தி.க வழியாகவோ இதுவரை என்ன செய்திருக்கிறார் என பெ.தி.க தோழர்கள் தான் சொல்ல வேண்டும். சமுதாய மாற்றத்துக்காக நேரடியாக உழைப்பதில் லீணா, தமிழச்சி இருவருமே ஒன்றுமில்லைதான். ஆனால் ஒரு சரியான பெரியார்கொள்கைக்காரன் இந்த நேரத்தில் லீணாவை ஆதரிப்பான்.